search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியாய விலைக்கடை பணியாளர் சங்கம்"

    கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தபோராட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் இந்த சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமஜெயம், கந்தசாமி, சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில பிரசார செயலாளர் சுகமதி, நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் ஜான்ஜோசப், நல்லம்பள்ளி கிளை துணைத்தலைவர் முருகன், நிர்வாகிகள் உஷாராணி, ருக்மணி, சீனிவாசன் ஜம்பு, லலிதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

    பொதுவினியோகத்திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ரேஷன்கடைகளுக்கு பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ரேஷன்கடைபணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    ×